tamilnadu

மாணவர்கள் தாழ்வு மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டும் தன்னம்பிக்கை பேச்சாளர் ஜோ.பிரசாத் பேச்சு

தஞ்சாவூர் நவ.23- மாணவர்கள் தாழ்வு மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டும் என்றார் தன்னம்பிக் கை பேச்சாளர் ஜோ.பிரசாத்  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தனம் திருமண மகாலில் டாக்டர் ஜே.ஸி.குமரப்பா செண்டினரி பவுண்டேஷன் சார்பில், 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான “எண்ணி யது முடியும்” என்ற கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சி க்கு பள்ளித் தாளாளரும், தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகளின் மாநில துணை பொதுச் செயலா ளருமான முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமை வகித்து பேசினார். பள்ளி நிர்வாக இயக்கு நர் எம்.நாகூர் பிச்சை முன்னிலை வகித்தார். ஸ்கைப்ரோ தலைமைச் செயல் அலுவலர் மோகன் குமார் பேசினார்.  நிகழ்ச்சியில் தன்னம்பிக்கை பேச்சாளர் ஜோ.பிரசாத் பேசியதாவது, “18 வயது முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. வல்லர சாக மார்தட்டிக் கொண்டிருக்கும் நாடுகளில், அவற்றின் பின்னால் இருப்பது இந்திய வம்சா வளியை சேர்ந்த இளைஞர்களாகத் தான் இருப்பார்கள். இந்திய இளைஞர்களின் வளத்தைப் பார்த்து சர்வதேச நாடுகள் அச்சப்படுகின்றன.  தாய் மண்ணையும், தேசத்தையும் பெரி தாக மதிக்கும் இளைஞர்களால் நாடு பெருமை கொள்கிறது. இன்றைக்கு பெரும்பாலான இளைஞர்களின், மாணவர்களின் பிரச்சனை தாழ்வு மனப்பான்மை என்பதே. ஒவ்வொருவ ரும் அதனை விட்டொழிக்க வேண்டும். கண்ணிவெடித் தாக்குதலில் கால்களை இழந்த கும்பகோணத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஆனந்தன் பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு 3 தங்கப் பதக்கத்தை வென்றார்.  அவர் தாழ்வு மனப்பான்மையை விட்டொ ழித்து, தன்னை நம்பியதே காரணமாகும். கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது. கஷ்டப் படாமல் வரும் எதுவும் நிலைக்காது. படிப்பு மட்டுமே சிறந்த ஆயுதம். அதை மாணவர்கள் இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும். இலக்கை அடைய மாணவர்கள் போராட வேண்டும். கூகுளும், ஃபேஸ்புக்கும் சொல்லித்தராத ஏதோ ஒரு நல்ல விஷயத்தை சொல்லித் தருப வர்களாக நம்மீது அக்கறை உள்ளவர்களாக ஆசிரியர்கள் உள்ளனர்.  உங்களுக்காக அனைத்தையும் தியாகம் செய்யும் பெற்றோர்களுக்கு பரிசாக என்ன தரப் போகிறீர்கள்? தனிமனித ஒழுக்கம் மிகப் பெரிய சொத்து. மாணவர்கள் அதனை உணர வேண்டும். திட்டம் வகுத்து அதற்கேற்ப மாணவர்கள் செயல்பட்டால் வெற்றி உறுதி. சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றில் தன் னம்பிக்கை வேண்டும். தாழ்வு மனப்பான்மை யை விட்டொழித்தால் வெற்றி நிச்சயம். மனித சக்தி மகாசக்தி, சக்தியும், புத்தியும் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம்” இவ்வாறு பேசினார்.  நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் எஸ்.பாலச்சந்திரன், பள்ளி அறங்காவலர்கள் மா.கணபதி, மா.ராமு, சி.ஆனந்தன், அஸ் வின்ஸ்ரீதர், பிரியதர்ஷினி, பள்ளி முதல்வர் ஆர்.சுரேஷ் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரியை கவுசல்யா வரவேற்றார். ஆசிரியை நந்தினி நன்றி கூறினார்.