கும்பகோணம் டிச.3- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகாவிற்கு உட்பட்ட நாச்சியார்கோவில் ஊராட்சியில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையில் ஊராட்சியின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில் திருவிடைமருதூர் வட்டார வளர்ச்சி உத்தரவின் பேரில் நாச்சியார் கோயில் ஊராட்சி செயலர் வரதராஜன், ஊராட்சி பணியாளர் ராஜாங்கம், பணித்தள பொறுப்பாளர் மணிகண்டன், கண்ணன், மாரியப்பன், பிரபு, ராமு ஆகியோர் நாச்சி யார் கோவில் தெற்கு மட வளாகத்தில் தேங்கி இருந்த தண்ணீர், பொன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள திருப்பந்துறை வடிகால் வாய்க்கால் அடைப்பு ஏற் பட்டுள்ள பகுதிகளில் கொட்டும் மழையிலும் அப்புறப் படுத்தி தண்ணீர் வடிவதற்கு குப்பைகளை அப்பு றப்படுத்தினர். மழைத் தண்ணீர் அடைப்பு ஏற்படுவதற்கு பொது மக்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், குப் பைகளும் வாய்க்கால் மற்றும் தெருக்களில் கொட்டு வது இதற்கு காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக குப்பைகளை நீர் நிலைகளில் கொட்ட வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.