tamilnadu

img

விளையாட்டுப் போட்டி: பரிசு வென்ற பள்ளிகள் விவரம்

 தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) பள்ளிகளுக்கு இடையிலான பெரியார் நினைவு மாநில அளவில் கால்பந்து மற்றும் கையுந்துபந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது. பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் வீ.அன்புராஜ், மாவட்ட உடற்கல்வி அலுவலர் அந்தோணி, பரிசுத்தம் கல்லூரியின் தாளாளர் செபாஸ்டின் ராஜேஷ் ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர்.  பல்கலைக்கழக துணைவேந்தர் செ.வேலுசாமி இணை துணைவேந்தர் சா.தேவதாஸ், பேரா செந்தமிழ்குமார், பேரா ஜார்ஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எம்.இராமகிருஷ்ணன் பரிசுகளை வழங்கி னார். கால்பந்து போட்டியில் கிருஷ்ணகிரி அரசினர் மேல்நிலைப்பள்ளி  முதலிடத்தையும், தஞ்சாவூர் டான்பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும், கும்பகோ ணம் டாக்டர் ஜி.எஸ்.கல்யாணசுந்தரம் நினைவுப் பள்ளி மூன்றாம் இடத்தையும், கண்ணந்தான் குடி மேலையூர் அரசு மேல்நிலைப்பள்ளி நான்காம் இடத்தையும் பெற்றது.  கையுந்து பந்து போட்டியில் மயிலாடுதுறை டி.ஜி.என். எம்.பி.எல். மேல்நிலைப்பள்ளி முதலி டத்தையும், தஞ்சாவூர் தூய அந்தோணியார் மேல் நிலைப்பள்ளி இரண்டாமிடம், வலங்கை மான் அரசு மேல்நிலைப்பள்ளி மூன்றாமிடம், மைக்கேல் பட்டி தூய வளானர் மேல்நிலைப் பள்ளி நான்காமிடத்தையும் பெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் (பொ) பேரா து.ரமேஷ் மற்றும் உதவி உடற்கல்வி இயக்குநர் சமிராபேகம் செய்திருந்தனர்.

;