தஞ்சாவூர் செப்.22- தஞ்சாவூர் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு சென்னை காவல் கண்காணிப்பாளர் பழனிகுமார் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் சரகத்தை சேர்ந்த தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் நிலுவையில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் சம்பந்தமாக ஆய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில் மூன்று மாவட்டங்களிலும், நிலுவையிலுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்த வழக்குகள் ஆய்வு செய்யப்பட்டு, வழக்குகளை விரைவாக விசாரணை முடித்து குற்றப்பத்திரிகையை 60 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வது குறித்தும், குற்றவாளிகள் மீது விரைந்து கடுமையான நடவடிக்கை எடுப்பது குறித்தும், குற்ற வழக்குகளில் அறிவியல் ரீதியாக தடயங்களை சேகரித்து வழக்கு விசாரணையை மேற்கொள்வது குறித்தும்" அறிவுறுத்தப்பட்டன.