தஞ்சாவூர் அக்.25- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் உள்ள அட்லா ண்டிக் பன்னாட்டுப் பள்ளியில் ஐக்கிய நாடுகள் தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாதிரி ஐக்கிய நாடுகள் சபைக் கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளி சேர்மன் சீனிவா சன் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். பள்ளித் தாளாளர் ஜனனி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் அருள் பிரபாகர் மேற்பார்வையில், மாதிரி ஐநா சபை கருத்தரங்கு நடைபெற்றது. ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு உறுப்பு நாடுகளில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் பாதுகாப்பு சபை, உலக சுகாதார நிறுவனம், இந்திய நாடாளுமன்ற நடைமுறைகள், உலக சமூக பொருளாதார நிறுவனங்கள் போன்றவற்றைத் தலைப் பாக கொண்டு, இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஆஸ்தி ரேலியா, கனடா, ரஷ்யா போன்ற உறுப்பு நாடுகளின் பிரதி நிதிகளாக 15 மாணவ, மாணவிகள் பங்கேற்று மாதிரி ஐ.நா. சபையில் பேசினார்கள். சபை நடவடிக்கைகள், செயல்பாடு கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பிரெஞ்சு ஆசிரியர் பேட்ரிக் மாதிரி ஐநா சபைத் தலைவ ராகவும், சிறப்புச் செயலாளராக ரிமோ, துணைச் செயலா ளராக இவாஞ்சலின் ஆகியோர் செயல்பட்டு வழிநடத்தி னர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பெரோஷ், பிரியங்கா, உமா ஆகியோர் செய்திருந்தனர். மாணவர்களின் ஆளுமைத் திறன், மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறன் மேம்பாடு வளர்ச்சி அடையும் நோக்கில் மாதிரி ஐநா சபை கருத்தரங்கு நடத்தப்பட்டது.