tamilnadu

நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம்

தஞ்சாவூர், ஏப்.21- தஞ்சாவூர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மையத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் முதலுதவி மூலிகை மருத்துவ பயிற்சி முகாம் ஏப்.23 அன்று நடைபெற உள்ளது. தஞ்சாவூர்- திருச்சி நெடுஞ்சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் இயங்கி வரும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் இப்பயிற்சி நடைபெறுகிறது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு 97893-02906, 04362-264665 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மையத் தலைவர் ஏ.முகமது சபியுல்லா தெரிவித்துள்ளார்.

;