tamilnadu

img

தெப்பக் குளமாக மாறிய சாலைகள் தொற்று நோய் பரவும் அபாயம்

கும்பகோணம்,அக்,29- தஞ்சை மாவட்டம் கும்பகோ ணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் ஆரியப்படையூர் ஊராட்சிக்கு உட்பட்ட முழையூர் கிராமம் இந்திரா நகரில் சுமார் 125 தலித் குடும்பங்கள் 1984 முதல் தமிழக அரசால் இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்தில் வீட்டுமனை பெற்று குடியிருந்து வருகிறார்கள். இந்திரா நகரில் 1986 ல் தெரு சாலைகள் அமைக்கப்பட்டன. அதன் பிறகு சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் எவ்வித சாலைக ளும் போடப்படவில்லை. இந்திரா நகர் அருகே பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் ஆலயமும் சமத்துவபுரம் போன்ற முக்கிய அலுவலகங்கள் அருகருகே உள்ளன. குழந்தைகள்  பள்ளிகளுக்குச் செல்வதற்கு இந்த சாலையை பயன்படுத்தி வரு கிறார்கள். ஆனால்  இந்திரா நகர் தாழ்வான பகுதியாக இருப்பதா லும் பராமரிப்பு இல்லாமல் இருப்ப தாலும் அண்மையில் பெய்த மழை யில் எந்த நேரமும் தெருக்களில் மழைநீர் தேங்கி நின்று குளம் போல் காட்சியளிக்கிறது.  இதனால் அப்பகுதி மக்கள் வெளியில் வர முடியாமலும்  குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமலும் கூலித் தொழிலா ளர்கள் வேலைக்குச் செல்ல முடியா மலும் அவதியுற்று வருகின்றனர். தேங்கி நிற்கும் மழை தண்ணீர் துர்நாற்றம் ஏற்பட்டு  கொசு உற்பத்தி யாகி தொற்று நோய், டெங்கு காய்ச்சல் அபாயம் உள்ளதாக அப் பகுதி மக்கள் அச்சம் அடைந்துள் ளனர்.  இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இப்பொழுது பெய்த மழையிலும் தேங்கிய மழைநீர் வீட்டுக்குள் வரும் அபாயம் உள்ளது. இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப் பட்டு சாலைகளை உயர்த்த நட வடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். போர்க்கால அடிப்படை யில் இப்பணி நடைபெறாவிட்டால்  போராட்டம் நடத்தப்படும் என மக்கள் தெரிவித்தனர்.