tamilnadu

பயணிகள் நிழற்குடை அமைக்க கோரிக்கை 

 தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள திருச்சிற்றம்பலம் - பட்டுக்கோட்டை சாலையில், புனல்வாசல் சாலை மாரியம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தின் வழியாகத் தான் கீழபுனல்வாசல், வாடிக்காடு, இராமகிருஷ்ணாபுரம், வடக்கிக்காடு ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டும். இந்த பகுதி மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அறந்தாங்கி, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கும் இந்த பேருந்து நிறுத்தத்தைத் தான் பயன்படுத்தி வருகின்றனர்.  வெளியூர் பயணிகள் பேருந்துக்காக வெயிலிலும், மழையிலிலும் சாலையிலேயே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி புனல்வாசல் மாரியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில், புதிதாக நிழற்குடை அமைத்து தர வேண்டும்” என இப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

;