தஞ்சாவூர், ஆக.5- தஞ்சை பேராவூரணி கட்டிட பொறியாளர் சங்க பணி யேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. என்.சரவணன் தலைமை வகித்தார். மாநில இணைப் பொருளாளர் ஏசிசி.ராஜா வரவேற்றார். டி.கே.கணேசன், சி.துரையரசன், எஸ். ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜி.தன பால் அறிக்கை வாசித்தார். சங்கத்தின் புதிய தலைவராக பி. கோவிதரன், செயலாளராக டி.இளையராஜா, பொருளாள ராக எம்.கனகராஜ், துணைத் தலைவராக கே.குட்டியப்பன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநில உடனடி முன்னாள் தலைவர் என்.சையது சாகீர், எஸ்.பி.தமிழரசன் வாழ்த்திப் பேசினர். தலைவர் பி.கோவிதரன் ஏற்புரையாற்றினார். நிறைவாக பொருளாளர் எம்.கனக ராஜ் நன்றி கூறினார். தமிழ்நாடு, புதுச்சேரி கட்டிட பொறியா ளர்கள், பேராவூரணி சங்க நிர்வாகிகள், வர்த்தக சங்கத் தலை வர் ஆர்.பி.ராஜேந்திரன், பொருளாளர் எஸ்.ஜகுபர்அலி, லயன்ஸ், ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், “கட்டிடப் பணிகளுக்கு தட்டுப்பாடின்றி மணல் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆற்று மணல் பயன்பாட்டை குறைக்கும் வகையில், இதற்கு மாற்றான எம்-சாண்ட் மணல் குறித்து பொதுமக்களிடையே அரசு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.