tamilnadu

img

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக் கோரிக்கை  

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கிழக்குத் தொடக்கப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது. பெ.ஆ.கழகத் தலைவர் த.பழனிவேல் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் பாலசந்தர், ஆசிரியர்கள் சுபாஷ், சுபா, பாலசுந்தரி, சுமதி, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் டி.பி.சுப்பையன், திருவேங்கடம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், “ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, தமிழ்நாடு அரசு நடத்த திட்டமிட்டுள்ள பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும். விரைவில் நூற்றாண்டு விழா கொண்டாட உள்ள பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு புதிய கான்கிரீட் கட்டிடம் கட்டித் தர வேண்டும். பள்ளியின் புரவலர் நிதிக்கு ரூ 10 ஆயிரம் கொடுத்த பள்ளியின் ஆசிரியர் பாலசுந்தரிக்கு நன்றி தெரிவித்தும், பள்ளியின் ஆண்டு விழாவை சிறப்பாக நடத்துவது என்றும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

;