tamilnadu

img

பள்ளிகளில் குடியரசு தின விழா

தஞ்சாவூர், ஜன.27- தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கரிசவயல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் பழனிவேல் கொடியேற்றி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வேலாயுதம் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் கே.என்.நாகூர்மீரா சிறப்புரையாற்றினார். உதவும் கரங்கள் அறக்கட்டளை பொறுப்பாளர்கள் மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர். புதுமாத்துர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு ஆசிரியர் முருகன் வரவேற்றுப் பேசி னார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அ.ராம்மோகன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பசுபதிகோயில் நூலகர் முருகானந்தம், தஞ்சாவூர் ஒன்றியக்குழு உறுப்பினர் தமிழ்செல்வி அமல்ராஜன், மாத்தூர் கிழக்கு ஊராட்சி தலைவர் மஞ்சுளா, துணைத்தலைவர் பவித்ரா முருகா னந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு ஊராட்சி உறுப்பினர் கமலவள்ளி பரிசு பொருட்கள் வழங்கினார். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 2020 ஆம் ஆண்டிற்கான டைரி நினைவு பரிசாக வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் மு.மாலதி நன்றி கூறினார். சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழியில் ச.மு.இ. நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தலைமையாசிரியர் சி. பாலமுருகன் தலைமை வகித்தார். சீர்காழி வட்டாரக் கல்வி  அலுவலர் இரா. பூவராகன் தேசிய கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

;