தஞ்சாவூர்/பெரம்பலூர் ஆக.3- தொழிலாளர் நலச் சட்டத் திருத்தத்தை, திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி, அனைத்து தொழிற்சங் கங்கள் சார்பில் தஞ்சாவூர் ரயில டியில் வெள்ளிக்கிழமை அன்று மாலை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. முதலாளிகளுக்கு சாதகமாக தொழிலாளர் நல சட்டங்களை திருத்தும் மசோதாக்களை திரும்பப்பெற வேண்டும். சேலம் உருக்காலை, பாதுகாப்பு தளவாட தொழிற்சாலைகள், ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவ னங்களை தனியார் மயமாக்க கூடாது. பொதுத்துறை நிறுவன மான பிஎஸ்என்எல்லை சீர்குலைக்கக் கூடாது. வங்கி, இன்சூரன்ஸ், போக்குவரத்து, மின்சாரம், நுகர்பொருள், உள்ளிட்ட மத்திய, மாநில பொதுத் துறை நிறுவனங்களை பாது காத்திட வேண்டும் உள்ளிட்ட கோரி க்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடை பெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வெள்ளிக் கிழமை மாலை தஞ்சை ரயில டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் சி.ஜெயபால், ஏ.ஐ.டி.யு.சி மாவட்டச் செயலாளர் ஆர்.தில்லை வனம், ஐ.என்.டி.யு.சி மாவட்டச் செயலாளர் என்.மோகன்ராஜ், தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் ஆண்ட்ரூ கிருஷ்டி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வங்கி, மின் ஊழியர், போக்கு வரத்து, தொலைத் தொடர்பு, டாஸ்மாக், அமைப்பு சாரா, கட்டு மான, உடல் உழைப்பு தொழிலா ளர், மருந்து விற்பனை பிரதிநிதி கள், சிறு வியாபாரிகள், சாலை யோர வியாபாரிகள், அரசு ஊழியர், அரசுப் பணியாளர், ஆட்டோ, காப்பீட்டுக் கழகம் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பெரம்பலூர்
இதே போல் பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே அனைத்து தொழிற்சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, தொமுச மாவட்ட உறுப்பினர் ஆர்.ரெங்கசாமி, சிஜடியு மாவட்டத் தலைவர் எஸ்.அகஸ்டின், எச்எம்எஸ் மாவட்டச் செயலர் ஏ.சின்னசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். சங்க நிர்வாகிகள் கே.கே.குமார், பி.ரெங்கராஜ், என்.தியாகராஜன், பி.நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து தொழில்சங்க நிர்வாகிகள் பி.வேணுகோபால், ஏ.கணேசன், கே.ஜெயராமன், ஜி.ரமேஷ், ஏ.ரெங்கநாதன், என்.எம்.ரெங்கராஜ், ஏ.சுகுமாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.