tamilnadu

img

இஐஏ சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஆக.13- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தந்தை பெரியார் சிலை அருகில் பெரி யாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார் பில் இஐஏ எனப்படும் சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீட்டு அறிக்கை 2020 சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, திராவிடர் விடுதலை கழக  நகர அமைப்பாளர் கலைச்செல்வன் தலைமை வகித்தார். திராவிடர் விடு தலைக் கழக பொறுப்பாளர்கள் சித.திரு வேங்கடம், மருத.உதயகுமார், விவேக், திராவிடர் கழக பொறுப்பாளர்கள் குழ.அரங்கசாமி, சந்திரமோகன், தமிழக மக் கள் புரட்சிக் கழக பொறுப்பாளர்கள் ஆறு. நீலகண்டன், ரெட்டவயல் மாரிமுத்து, ஊமத்தநாடு ஜெய்சங்கர், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி பொறுப்பாளர் ராஜமாணிக் கம், மூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர்கள் வழக்கறிஞர் கருப் பையா, ஆர்.எஸ்.வேலுச்சாமி, காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள் சேக் இப்ராம்சா, சாதிக் அலி, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள் மைதீன், சேக் அப் துல்லா, மறுமலர்ச்சி திராவிட முன்னேற் றக் கழக பொறுப்பாளர்கள் பாலசுப்ரமணி யன், குமார், கண்ணன், மனிதநேய மக்கள் கட்சி  அப்துல் சலாம், தமிழ்வழிக் கல்வி இயக் கம் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், தமிழக மக்கள் விடுதலை இயக்கம் முனைவர் ஜீவா, விதைநெல் இலக்கிய கூடம் புஷ்பராஜ், அறநெறி மக்கள் கட்சி ஆயர் த.ஜேம்ஸ், தமிழின உணர்வாளர் பூக்கொல்லை ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;