கும்பகோணம், ஜன.26- கும்பகோணம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் 71 ஆவது குடியரசு தின விழா நடைபெற்றது. விழாவிற்கு சுதந்திர போராட்ட வீரரும், தேசிய கட்டுப் பாட்டு குழு தலைவர் நல்லகண்ணு தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- அம்பேத்கர் அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கி சமத்துவம் சகோத ரத்துவம் சுதந்திரம் ஆகியவை பாது காக்கப்பட வேண்டும். மதச்சார்பற்ற நாட்டில் மதங்கள் கலக்கக் கூடாது. இந்தி யாவில் ஏழு பெரிய மதங்கள் பழமொழி கள் ஒன்றிணைக்கப்பட்ட நாடு தான் இந்தியா. இந்தியாவில் மதம் என்பது தனி யுரிமை. ஆனால் மத்திய அரசு மதம் சார்பில் குடியுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்திய நாடு என்பதை விட்டு விட்டு இந்து நாடு என்பதை வலி யுறுத்தி வருகிறது. அரசியலமைப்பு சட்டத்தை மதித்து 130 கோடி இந்தி யர்கள் உலகத்திலேயே அதிக அளவில் வாக்களிக்க கூடிய வாக்காளர்கள் இந்தி யர்களே. எனவே இந்தியாவில் மதம் வேறு அரசியல் வேறு என்பதை உணர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி லெனின், மாவட்ட செயலாளர் மு.அ. பாரதி, திமுக நகர செயலாளர் தமிழழ கன், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் லோகநாதன், விடுதலை சிறுத்தை கட்சி விவேகானந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.