tamilnadu

img

அரசுப் பள்ளி  மாணவர்களுக்கு நிவாரணம்

தஞ்சாவூர், மே 14- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப் பள்ளியில் பயிலும் 70 மாணவர்கள் குடும்பங்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சடை யப்பன், தவமணி ஆகியோர் நிவாரணத்தை வழங்கினர். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கௌதமன், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் முகம்மது பாரூக், பாம்பே ஸ்டோர் எல்.ஏ.எம்.சாதிக் அலி, தலைமை ஆசிரியர் சித்ராதேவி, உதவி ஆசிரியர் காஜா முகைதீன் கலந்துகொண்ட னர். தலா 5 கிலோ அரிசி பாம்பே ஸ்டோர் எல்.ஏ.முகமது மைதீன் குடும்பத்தினர் சார்பிலும், காய்கறி தொகுப்பு முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் முகமது பாரூக் மற்றும் ஆசிரியர் ஹாஜா மைதீன் ஆகியோர் சார்பிலும் வழங்கப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ 20 ஆயிரம் ஆகும்.