தஞ்சாவூர், மே 16- தஞ்சாவூர் மாவட்டம், பேரா வூரணியில், திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி முன்னாள் தலைவர் என். அசோக்குமார் சார்பில், முடி திருத்து னர், மைக் செட் அமைப்பாளர் குடும்பங்களைச் சேர்ந்த 100 பேருக்கு, ரூ 1 லட்சம் மதிப்பிலான அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, திமுக முன்னாள் ஒன்றியச் செய லாளர் சுப.சேகர், தலைமைக் கழக பேச்சாளர் அப்துல் மஜீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரங்கம் ராமநாதன், நீலகண்டன், மைக் செட் அமைப்பாளர் சங்கத் தலைவர் முகிலன், செயலாளர் தினேஷ், முடி திருத்துனர் சங்கம் கௌரவத் தலைவர் மதிவாணன், தலைவர் ராஜா, செயலாளர் கதிரேசன், பொருளாளர் நீலகண்டன் கலந்து கொண்டனர்.