சென்னை, ஏப்.25- கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தலா 1000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலுள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஈஎஸ்ஐ திட்டத்தில் பதிவுச் செய்துள்ள 21 ஆயிரம் தொழிலாளர்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.