tamilnadu

அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

தஞ்சாவூர், ஆக.23- தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஈச்சன்விடுதி முக்கனி தரைப்பாலத்தில் சுமார் 50 வயது மதிக்க த்தக்க ஆண் ஒருவர் உடல் முழுவதும் அழுகிய நிலையில் பிண மாக கிடந்தார். வெளிர் நீல நிறத்தில் ஒரு முழுக்கை சட்டை  மட்டும் அவர் அணிந்திருந்தார். அவரது சட்டை காலரில், தஞ்சா வூரில் உள்ள ஒரு டெய்லர் கடையின் முகவரி இருந்தது. இது  குறித்து, செருவாவிடுதி தெற்கு கிராம நிர்வாக அலுவலர் நரே ந்திரன் கொடுத்த புகாரின் பேரில், திருச்சிற்றம்பலம் காவல்  உதவி ஆய்வாளர் கர்ணன் வழக்கு பதிவு செய்தார்.