tamilnadu

நவ.5-ல் ராஜராஜன் சதய விழா 

தஞ்சாவூர், அக்.29- தஞ்சையின் அடையாளமாகத் திகழும் பெரிய கோயிலைக் கட்டிய மன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் ஆண்டு தோறும் ஐப்பசி சதய விழாவாக நடைபெறுகிறது.  நவ.5 ஆம் தேதி சதய விழா தொடங்குகிறது. 6 ஆம் தேதி ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெறும். இரண்டு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பட்டிமன்றம், நாட்டியம், நாடகம், திருமுறை அரங்கம், கவியரங்கம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெறும்.  இதையொட்டி பெரிய கோயிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சதய விழாக்குழு தலைவர் துரை.திருஞானம், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் ச.கிருஷ்ணன், கோயில் செயல் அலுவலர் எஸ்.மாதவன் கலந்து கொண்டனர்.