tamilnadu

img

டெல்டா மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்

தஞ்சாவூர், ஆக.22- தஞ்சை மாநகரம் பர்மா காலனி, பாத்திமா நகர் ஆகிய இடங்களில் எம்.கோ ஸ்கனி, எஸ்.சாந்தா ஆகியோர் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை  ஒன்றியம், திருமலைசமுத்திரம், அய்யாசாமி ப்பட்டி, ஆலக்குடி, வல்லம், நாகத்தி, ஆற்காடு, அம்மன்பேட்டை, அற்புதபுரம், மாத்தூர், நல்லிச்சேரி ஆகிய இடங்களில் நடை பெற்ற மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்க த்தில் ஒன்றியச் செயலாளர் எம்.மாலதி, மாவ ட்டக்குழு உறுப்பினர் கே.அபிமன்னன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  மதுக்கூர் ஒன்றியம், கீழக்குறிச்சி, அண்டமி, ஆவிக்கோட்டை ஆகிய இடங்களி லும், பேராவூரணி ஒன்றியம் திருச்சிற்றம்ப லம், வலசக்காடு, வாட்டாத்திக்கொல்லை, பூவாளூர் ஆகிய இடங்களிலும் அம்மா பேட்டை ஒன்றியம் இராராமுத்திரைக் கோட்டை, திருவோணம் ஒன்றியம் தெற்கு கோட்டை, வடக்கு கோட்டை ஆகிய இடங்களிலும், சேது பாவாசத்திரம் ஒன்றியம், மேல மணக்காடு, கீழ மணக்காடு ஆகிய இடங்களில் மாவ ட்டக்குழு உறுப்பினர் வீ.கருப்பையா, தலை மையிலும் நடைபெற்றது. சுப்பம்மாள் சத்தி ரம், கழுமங்குடா, மருங்கப்பள்ளம் ஆகிய இடங்களிலும், ஒரத்தநாடு ஒன்றியம்  நெய்வாசல், அரசப்பட்டு ஆகிய இடங்களில்  சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என்.சுரேஷ்கு மார் தலைமையிலும் நடைபெற்றது.

திருக்கடையூர் 
திருக்கடையூரில் கட்சியின் வட்ட செயலாளர் பி.சீனிவாசன் தலைமையிலும், டி.மணல்மேட்டில் மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.ரவிச்சந்திரன் தலைமையிலும் நடைபெற்றது.
கும்பகோணம்
திருவிடைமருதூர் ஒன்றியம் சார்பில் திருச்சேறை கிராமத்தில் நடந்த பிரச்சார இயக்கத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருளரசன், ஒன்றிய செயலாளர் பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
அரியலூர்
அரியலூர் மாவட்டம் சிலகால் கிராமத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.இளங்கோவன் தலைமையில் மத்திய மாநில அரசை கண்டித்து பிரச்சார இயக்க துண்டு பிரசுரம் மக்களிடம் வழங்கப்பட்டது. கிளை செயலாளர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்சிராப்பள்ளி
திருச்சி மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 13 வது மற்றும் 14வது வார்டு காந்திநகர் பகுதிகளில் கட்சியின் சார்பாக நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்திற்கு வாலிபர் சங்க வட்ட துணை செயலாளர் விஜய் தலைமை வகித்தார். 
நாகப்பட்டினம்
நாகை நகரக் குழு சார்பில், நாகப்பட்டினத்தில் கடைகள், வீடுகள் தோறும் துண்டறிக்கை அளித்து மக்கள் சந்திப்பு-பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதற்கு சிபிஎம் நாகை நகரச் செயலாளர் சு.மணி தலைமை வகித்தார்.

;