கும்பகோணம், மே 28- தஞ்சை மாவட்டம் திருபுவனம் சோழன் பட்டு கூட்டுறவு சங்க தலைவரும், கும்பகோ ணம் மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனரு மான சிங் எஸ்.செல்வராஜ் தனது சொந்த நிதியிலிருந்து ஊரடங்கால் வருமானமின்றி முடங்கிய 30 புரோகிதர்கள் மற்றும் விவசாய குடும்பத்தின ருக்கு 10 கிலோ அரிசி, காய்கறி கள் 500 ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவை நிவாரணமாக வழங்கினார். நிகழ்வின் போது திருபுவனம் திகோ சில்க்ஸ் தலைவர் தியாகராஜன், திரு வள்ளுவர் பட்டு கூட்டுறவு சங்கத் தலைவர் ஜி பன்னீர் செல்வம் சோழன் பட்டு கூட்டு சங்க துணைத் தலைவர் வைரவேல் இயக்குனர்கள் சேகர், ராஜன் கூட்டுறவு பண்டகசாலை துணைத் தலைவர் சிங்ரமேஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.