tamilnadu

img

இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று இடம் வழங்குக

சிதம்பரம், பிப். 10- சிதம்பரம் பகுதியில் 369 வீடுகள் இடித்து இரண்டு வருடங்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் நேரில் முறையிட்டு மனு அளித்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரத்தை ஒட்டியுள்ள பூதகேணி மற்றும் தில்லை அம்மன் கோவில் தெரு, வாகீச நகர், கோவிந்த சாமி தெரு, அம்பேத்கர் நகர், குமரன் தெரு  உள்ளிட்ட பகுதிகளில் குடியிருந்த 369 குடி யிருப்பு வீடுகளை வாய்கால் நீர்நிலை ஆக்கிர மிப்பு எனக் கூறி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று இடம்  வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதின் பேரில் சார் ஆட்சியர் விசுமகாஜன் தலை மையில் நடைபெற்ற கூட்டத்தில் கடந்த 6  மாதங்களுக்கு முன்பு வீட்டுமனை ஒதுக் கீட்டுக்கான டோக்கன் வழங்கப்பட்டது. ஆனால் அதற்கான இடங்கள் இதுவரை ஒதுக்கித் தரவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் சிதம்பரம் சார் ஆட்சியரையும், சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியனையும் சந்தித்து  மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட  சட்டமன்ற உறுப்பினர் முதல்வரின் கவனத்  திற்கு எடுத்துச் சென்று விரைவில் நடவ டிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.