tamilnadu

img

தனியார் பள்ளிகள் 35% கல்வி கட்டணத்தை வசூலிக்க அனுமதி

தனியார் பள்ளிகள் 35% கல்வி கட்டணத்தை வசூலிக்க அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்க விதித்த தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனியார் பள்ளிகள் நடப்பு கல்வியாண்டுக்கான மீதமுள்ள 35% கல்விக்கட்டணத்தை பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் வசூலிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

ஆசிரியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க வேண்டியுள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், முழு கட்டணத்தை வசூலித்த  பள்ளிகள் குறித்து நவம்பர் 27ஆம் தேதிக்குள் தமிழக அரசு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். தவறினால் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பள்ளிகள் திறப்பு குறித்த கேள்விக்கு, பள்ளிகள் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.