தஞ்சாவூர், பிப்.19– தஞ்சாவூர் பெரிய கோவிலில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு பிரகன் நாட்டியாஞ்சலி கலைவிழா பிப்.21 அன்று துவங்குகிறது. மஹா சிவராத்திரியை முன்னிட்டு, தஞ்சாவூர் பெரிய கோவிலில், பிப்.21 அன்று முதல் பிப்.27 வரை நடைபெறும் பிரகன் நாட்டியாஞ்சலி விழாவில், தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா, புதுதில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேடிசயா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த, 500-க்கும் மேற்பட்ட நடனக்கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். கதகளி, மோகினி ஆட்டம், குச்சுபுடி, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பிரகன் நாட்டியாஞ்சலி விழாவுக்கான ஏற்பாடுகளை, பிரகன் நாட்டியாஞ்சலி பவுண்டேஷன், தென்னக பண்பாட்டு மையம், அரண்மனை தேவஸ்தானம் இணைந்து செய்து வருகிறது.