tamilnadu

img

பேராவூரணி அருகே குளம் தூர்வாரும் போது முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

தஞ்சாவூர், ஜூன் 11- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள கட்டயங்காடு அய்யனார் குளம் ரூ. ஒரு லட்சம் மதிப்பில் தூர்வா ரும் பணி நடைபெற்று வருகிறது. திங்கள் கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரும் போது முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை தஞ்சை தமிழ் பல் கலைக்கழக தொல்லியல் துறை ஆய்வு மாணவர் கார்த்திகேயன் அங்கு ஆய்வு நடத்தினார். இக்குளத்தில் இதே போல் 30 க்கும் மேற்பட்ட இடங்களில் முது மக்கள் தாழி புதைந்து இருக்கலாமென கூறப்படுகிறது.  மேலும் முதுமக்கள் தாழி சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்க லாம் எனக் கருதப்படுகிறது. தொல்லி யல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி னால் இதன் முழு விபரம் தெரியவரும் என கிராமத்தினர் தெரிவித்தனர்.

செவ் வாய்க்கிழமை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு அய்யனார் குளம் பகுதியில் புதையுண்டு கிடக்கும் முதுமக்கள் தாழியை பார்வையிட்டார். பின்னர் கிராம மக்களிடம் விபரங்களை கேட்டறிந்து மாவட்ட ஆட்சியர், தொ ல்லியல் துறை அமைச்சர் ஆகியவர்க ளிடம் இதுகுறித்து பேசுவதாகவும் முழுமையாக ஆய்வு நடத்த ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்.  கடந்த  1996 ஆம் ஆண்டு இக் குளத்தின் அருகில், வேறொரு இடத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டதா கவும், அதுகுறித்து தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்தும் ஏதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வும் இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதே போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை, தஞ்சை மாவட் டங்களுக்கு இடையே அம்பலத்திடல் என்னுமிடத்தில் வன்னி மரங்கள் நிறைந்த வில்லுன்னி ஆற்றங்கரையில் கருப்பு, சிவப்பு முதுமக்கள் தாழிகள், எலும்புகள், சிறு சிறு பானைகள் என சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பரவி இருந்தது கண்டறியப்பட்டது.