tamilnadu

ஊரடங்கின் போது ஆதரவற்றவர்களுக்கு உணவளித்தவரை தாக்கிய காவல்துறையினர்

தஞ்சாவூர், மார்ச் 23- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி யில் மக்கள் ஊரடங்கின் போது, பேருந்து நிலையத்தில், ஆதரவற்ற நிலையில் படுத்திருந்த மூதாட்டிக்கு உணவளிக்கச் சென்றவரை வட்டாட்சியர் முன்னி லையில், காவல்துறையினர் தாக்கிய தாக புகார் எழுந்துள்ளது.  இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் மாலை 9 மணி வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசு கேட்டுக் கொண்டிருந்தது. இதனால் பேராவூர ணியில் கடைகள், உணவகங்கள், மருந்து, பால் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது.  இதனால் வெளியூரில் இருந்து வந்து தங்கி, உணவகங்களில் சாப்பிட்டு வேலை செய்து வருவோர், யாசகம் வாங்குவோர், முதியோர்கள் உண வின்றி பாதிக்கப்பட்டனர். புதிய பேருந்து நிலையத்தில் 10 க்கும் மேற்பட்ட முதியோர் உணவின்றி தவித்தனர். இந்நிலையில், இதுகுறித்து தகவல் கிடைத்த, பேராவூரணி முத்த ழகப்பா சாலையில் வசித்து வரும் தனி யார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மருத. உதயகுமார் (30) என்பவர் தனது நண்பரு டன் உணவு மற்றும் தண்ணீருடன் பழைய பேருந்து நிலையம், நிழற்குடை களில் ஆதரவற்ற முதியோர்களுக்கு, உணவு அளித்துள்ளார்.  தொடர்ந்து, அண்ணா சிலை வழியாக புதிய பேருந்து நிலையம் சென்ற போது, அங்கிருந்த காவலர்கள் வழிமறித்து நிறுத்தி, வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அங்கிருந்த வட்டாட்சி யர் க.ஜெயலெட்சுமி முன்னிலையில் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மருத.உதயகுமார் கூறுகை யில், “உணவு பொட்டலங்களுடன் சென்ற என்னையும், எனது நண்பரை யும் காவல்துறையினர் வழிமறித்து விசாரித்தனர். அவர்களிடம் நான் விவரத்தை தெரிவித்துக் கொண்டி ருந்தேன்.” உன்னை யார் வெளியில் வரச் சொன்னது. சாப்பாடு இல்லை என்றால், அதெல்லாம் சாகட்டும். நீ என்ன. அரசாங்கமா.. உன்னுடைய லைசன்ஸ் எங்கே. இன்சூரன்ஸை எடு என்று கேட்டு, வண்டி சாவியை பிடுங்கிக் கொண்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.  ஒரு கட்டத்தில் ஆபாசமாக பேசி, தலையில் அணிந்திருந்த ஹெல்மெட் மீது கையாலும், லத்தியாலும் அடித்த னர். உடனே அங்கிருந்த வட்டாட்சியரி டம் நான் நேரில் சென்று முறையிட்ட போது, “144 தடை உத்தரவு போட்டு இருக்கும் போது, நீ எதற்கு வெளி யில் வந்தாய்” என்றார். மாவட்ட ஆட்சி யர், மாவட்ட காவல்துறை கண்கா ணிப்பாளர் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.  இதே போல் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களையும் காவல்துறை அனுமதிக்கவில்லை. அவசர வேலையாக வெளியில் வந்த இளைஞர்களையும் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி, வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு இளைஞர்கள் சிலரை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை வீடு புகுந்து மருத.உதயகுமார் மற்றும் அவரது நண்பர் விவேக் ஆகியோரை பேராவூரணி காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.