தஞ்சாவூர் ஜூன்.18- தமிழ்ப் பல்கலைக்கழகமும், தஞ்சாவூர் ரோட்டரி சங்கமும் இணைந்து தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் 10 ஆயிரம் சதுர அடியில் ‘மியாவாக்கி’ முறையில் குறுங்காடு ஒன்றினை அமைக்க புதன்கிழமை அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இக்குறுங்காட்டில் அரிய வகை மரங்கள் வளர்க்கப்படும்.தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கோ.பாலசுப்ரமணியன் முன்னிலையில், தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் கு.சின்னப்பன், ரோட்டரி சங்கத்தின் தலைவர் ப. தமிழ்ச் செல்வன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டனர். இந்நிகழ்வில் துணைப்பதிவாளர் கோ.பன்னீர்செல்வம், இரா. உமாமகேசுவரி, கோட்டப்பொறியாளர் பா.செல்வ பாண்டியன் மற்றும் உதவிப்பொறியாளர் ம.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.