தஞ்சாவூர், மார்ச் 15- தஞ்சை மாவட்டம் வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தில் பெரியார் கலை விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பல்கலைக் கழக இணை துணைவேந்தர் எஸ்.தேவ தாஸ் தலைமை வகித்து பேசினார். வெக்கி கேலி சித்திரங்கள் முதன்மை செயல் அலு வலர் மற்றும் நடிகர் வெக்கி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டிப் பேசினார். நாட்டுப்புற மக்கள் பாடகர் முனைவர் மதுரை சந்திரன் கலை நிகழ்ச்சியில், பங்கு பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கப்பட்டது. முன்னதாக, மாணவர் சபைத் தலை வரும், மூன்றாமாண்டு எழிற்கலைத்துறை மாணவியுமான சோமியா வரவேற்றார். நிறைவாக, மாணவர் சபை செயலாள ரும், வணிகவியல் துறை இரண்டா மாண்டு மாணவருமான எம்.உதயன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கல்விப்புல முதன்மையர் பேரா.பி.கே.ஸ்ரீவித்யா, மாணவர் நலப்பிரிவு இயக்குநர் பேரா எஸ்.பி.கே.பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கணினி பயன்பாட்டியல் துறை மற்றும் மென்பொருள் பொறியியல் துறையினர் செய்திருந்தனர்.