தஞ்சாவூர், பிப்.12- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஆவணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியப் பெருந்தலைவர் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் சடையப்பன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் தவமணி முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ் வரவேற்றார். சசிகலா ரவிசங்கர் ஒன்றியப் பெருந்தலைவராக பதவியேற்றார். அம்மையாண்டி ஊராட்சி மன்றத் தலைவர் மல்லிகை வை.முத்துராமலிங்கம், ஒன்றியக்குழு உறுப்பினர் பி.பெரியநாயகி, சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு உறுப்பினர் நாடியம் சிவ.மதிவாணன், சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டுக்கோட்டை சி.வி.சேகர், பேராவூரணி மா.கோவிந்தராசு ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஒன்றியப் பெருந்தலைவர் சசிகலா ரவிசங்கர் நன்றி தெரிவித்தார். இவ்விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.திருஞானம் சம்பந்தம், முன்னாள் மாநில கயிறு வாரியத் தலைவர் எஸ்.நீலகண்டன், பட்டுக்கோட்டை அதிமுக ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியன், நகரச் செயலாளர் சுப.ராஜேந்திரன், முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் விமலா கணேசன், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு உறுப்பினர் குழ.செ.அருள்நம்பி, களத்தூர் முருகன், வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், பொறியாளர் கோவி.இளங்கோ, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஆவணம் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.