தஞ்சாவூர், ஆக.11- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ம. கோவிந்த ராவ் தலைமையில் கலந்தாய் வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரி விக்கையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தங்களின் வீடு களிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி அளிக் கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் பரிந் துரை மற்றும் அலுவலர்களின் ஆய் வுக்குப் பின்னர் கொரோனா நோயாளி கள் தங்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக் கப்படுகின்றனர். இணை நோய் உள்ள வர்கள் தங்களின் வீடுகளில் தனிமைப் படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட மாட்டாது. கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு தங்களின் வீடுகளில் தனி மைப்படுத்தி உள்ளவர்கள் காய்ச்சல் மற்றும் இதர அறிகுறிகள் இருப்பின், அதுகுறித்து அருகிலுள்ள அரசு மருத்து வமனைக்கு உரிய தகவல் தெரிவித்த பின் மருத்துவ சிகிச்சை எடுப்பதற்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு தங்களின் வாகனங்களில் அடுத்தவர் உதவி இல்லாமல் தானாகவே ஓட்டிச் சென்று சிகிச்சை பெறலாம். உடல்நிலை முடியாதவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாகவே அரசு மருத்து வமனைக்கு செல்ல வேண்டும். அவ் வாறு செல்வதன் மூலம் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட வர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை முன் கூட்டியே தயார் செய்திட முடியும். எனவே, கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களை பின் பற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார்.