தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பெரியநாயகிபுரம் ஊராட்சி துலுக்க விடுதியிலிருந்து, புதுக்கோட்டை செல்லும் தார்ச்சாலையை இணைக்கும் வகையில் வனத்துறை அனுமதியுடன் சுமார் 600 மீ தூரம் மண் சாலை அமைக்கப்பட்டது. இந்த மண் சாலை மழைக் காலங்களில் சேதமடைவதால் கிராம மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர். அதனால் மண் சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என தொடர்ந்து கடந்த கால் நூற்றாண்டுகளாக கிராம மக்கள் போராடி வருகின்றனர். இதுகுறித்து பல முறை கிராம மக்கள் கோரிக்கை விடுத்தும் வனத்துறை அனுமதி அளிக்கவில்லை.