tamilnadu

img

குடிநீர் வழங்காததை கண்டித்து மக்கள் மறியல்

தஞ்சாவூர், அக்.8- தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டி யில் கடந்த மூன்று நாட்களாக செங்கிப் பட்டி ஊராட்சி சார்பாக குடிநீர் வினி யோகம் செய்யப்படவில்லை என கூறப் படுகிறது. குடிநீர் வழங்கக் கோரி செங்கிப்பட்டி ஊராட்சி அலுவல கத்திற்கு பொதுமக்கள் சென்று புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் எந்த நட வடிக்கையும் இல்லை. இதைதொடர்ந்து செவ்வாய்க் கிழமை செங்கிப்பட்டி மேலத்தெருவை சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட பெண் களும், ஆண்களும் காலிக் குடங்களு டன் கந்தர்வக்கோட்டை- செங்கிப்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். காவிரி கூட்டுக் குடிநீர் மூலம் வழங்கப் படும் காவிரி நீரை தங்கள் பகுதிக்கும் வழங்க வேண்டும். தங்கு தடையின்றி நாள் தோறும் குடிநீர் வழங்க வேண் டும் என தெரிவித்தனர். இதைத்தொட ர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கிப் பட்டி காவல்துறையினர் மறியலில் ஈடு பட்ட பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதன்பின் மக்கள் கலைந்து சென்றனர்.