tamilnadu

img

வேளாண் சட்டங்களை ஆதரித்த அதிமுகவிற்கு பாடம் புகட்டிய டெல்டா மக்கள்....

தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் 8-ல் 7 தொகுதிகளை திமுக கூட்டணிக்கு வெற்றியை தந்து, வேளாண் சட்டங்களை ஆதரித்தஅதிமுகவிற்கு டெல்டா மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் ஆட்சி அமைக்க 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், திமுக 174 இடங்களில், 130ல் வெற்றி பெற்று திமுக தனி பெரும்பான்மை பெற்றுள்ளது.இதன்மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்க உள்ளார். 

திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 16, மதிமுக 4, விசிக, 4, சிபிஎம் 2, சிபிஐ 2, கொமதேக 1 என்ற அடிப்படையில்வெற்றி பெற்றுள்ளன.இந்நிலையில், திருச்சி, தூத்துக்குடி, கரூர், உளுந்தூர்ப்பேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் போட்டியிட்ட இடங்களில் அதிகப்படியான இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது.அந்தவகையில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 7 தொகுதிகளில் 6 தொகுதிகளில் திமுகவும், ஒரு தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. ஒரத்தநாடு தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் தஞ்சை மாவட்டத்தை திமுக முழுமையாக தன்வசப்படுத்தி உள்ளது.

அதேப்போல், டெல்டா மாவட்டங்களில், திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நாகை, கீழ்வேளூர், மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது. வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகளை பழிவாங்கிய அதிமுகவிற்கு டெல்டா மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

;