tamilnadu

பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை

தஞ்சாவூர், மே 10- தஞ்சை மண்டல கொரோனா தடுப்புக் குழு கண்காணிப்பு அலுவலர் எம்.எஸ்.சண்முகம் விடுத்துள்ள அறிக்கை: தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவ மனையில் வெளி மாவட்டங்களிலிருந்து பிரசவத்திற்காக சிகிச்சை பெற வரும் பெண்களை தனிமைப்படுத்தி சிகிச்சை  அளிக்க வேண்டும். வெளி மாவட்டங்க ளிலிருந்து, பிரசவத்திற்காக வருபவர்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த வர்களாக இருக்கும் பட்சத்தில், அவர்க ளுக்கு கண்டிப்பாக சளிப் பரிசோதனை செய்ய வேண்டும்.  நோய்த்தொற்றுக்கான அறிகுறி உள்ளதாக பரிசோதனை முடிவு வந்தால், அவர்களை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்க வேண்டும். அறிகுறி இல்லையென்றால், அவர்களை ராசா மிராசுதார் மருத்துவமனையிலேயே வைத்து சிகிச்சை அளிக்கலாம்.  மேலும் பிற மருத்துவமனைகளிலும் வெளி மாவட்டங்களிலிருந்து சிகிச்சை பெற வருபவர்களுக்கு தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து கட்டாயமாக சளிப் பரி சோதனை செய்ய வேண்டும். அவர்களு க்கு நோய்த்தொற்றுக்கான அறிகுறி இருந்தால், அவர்களை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.