கும்பகோணம், மே 24- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத் துள்ள நாச்சியார் கோவிலில் நீண்ட கால மாக துணை மின் நிலையம் அமைப்பதற்கு பல இடங்கள் தேர்வு செய்ய அதிகாரிகள் ஆய்வு செய்தும் இதுவரை துணை மின் நிலையம் அமைக்கப்படவில்லை. இத னால் தற்பொழுது நாச்சியார்கோவில் பகுதி யில் மிகவும் குறைவான மின்னழுத்த மின் வினியோகம் நடைபெறுவதால் 220 வோல்ட் வர வேண்டிய மின்சாரம் 120 வோல்ட் மட் டுமே வருகிறது. இதனால் மின்சாதன பொருட் கள் அடிக்கடி பழுதடைந்து சேதம் அடைந்து மின் துண்டிப்பு ஏற்பட்டு வருகிறது. தற்போது கோடை காலத்தில் மின் மிகை மின்சாரம் வழங்கப்படுவதாக அரசு அறி வித்திருந்தும் நாச்சியார்கோவில் பகுதி யில் மின் அழுத்த குறைவு ஏற்பட்டு மின்சா ரம் இருந்தும் பயனற்று அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்பட்டும் மக்கள் மிகவும் அவதி யுற்று வருகின்றனர்.
தற்பொழுது ஊர டங்கால் நாச்சியார் கோவில் பகுதியில் குத்துவிளக்கு பட்டறை இயங்காமல் இருக்கும் இந்த நேரத்திலும் குறைவான மின்னழுத்தம் வருவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மின் இணைப்பு பெறும்பொழுது 220 வோல்ட் வழங்க உத்தரவிட்டு அதற்கான கட்டணங்கள் மின் நுகர்வோரிடம் பெறப் படுகின்றன. ஆனால் முழுமையாக 220 வோல்ட் மின் வினியோகம் கிடைப்ப தில்லை. இது நுகர்வோர் சட்டப்படி வழக்குத் தொடுக்க வாய்ப்புள்ளது எனவும் தெரி வித்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே சம்பந்தப்பட்ட மின்துறை உயர் அதிகாரிகள் நாச்சி யார்கோயில் பகுதிக்கு முழுமையான மின் சாரம் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் சார்பில் தெரி வித்துள்ளனர் உரிய நடவடிக்கை இல்லை யென்றால் வருகிற ஜூன் 2-ம் தேதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் செய்யப் போவதாக முடிவு செய்துள்ளனர்.