தஞ்சாவூர், ஜூன் 15- தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு, மே மாத சம்பளம் வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மாற்றுத்திற னாளியான பகுதி நேர ஆசி ரியர் ஜலீல் முகைதீன் மற்றும் ஆசிரியர்கள் கூறுகையில், பகுதி நேர ஆசிரியர்களை பணி நியமனம் செய்த பின் மே மாதம் சம்பளம் தருவ தில்லை. அரசாணையில் 11 மாதங்களுக்கு மட்டும் சம்ப ளம் என்று குறிப்பிடாத போ தும், கல்வித்துறையால் ஒரு மாத சம்பளத்தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. கடந்த 8 ஆண்டுக்கும் மே மாதம் சம்பளம் வழங்க வில்லை. பகுதி நேர ஆசி ரியர்கள் பணியில் சேர்ந்து 9 ஆவது ஆண்டு மே மாதம் நடக்கிறது. எனவே இம்முறை மே மாதம் சம்பளம் வழங்கிட, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு, முதல்வர் நிதி ஒதுக்கி நியமனம் செய்த 16 ஆயிரத்து 549 பேரில் தற்போதுள்ள, 12 ஆயிரம் பேருக்கு மே மாத சம்பளம் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.