tamilnadu

img

உயிருக்குப் போராடும் நிலையில், மலேசியாவில் தவிக்கும் பாபநாசம் பெண்...

தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா தென்சருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (50). இவரது மனைவி பத்மினி (43). கடந்த 2 வருடத்திற்கு முன்னர் பத்மினி தன் கணவருடன்  மலேசியாவில் வீட்டு வேலை செய்ய சென்றுள்ளார்.

கணவர் சந்திரசேகரன் குழந்தைகளை காண வேண்டி ஓராண்டுக்கு முன்னரே மீண்டும் பாபநாசத்திற்கே திரும்பிவிட்டார். தொடர்ந்து பத்மினி மட்டும் மலேசியாவில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பத்மினி கடந்தஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதிமலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஜபாதன் அரசு மருத்துவமனையில் உடல்நிலைபாதிக்கப்பட்டு அனுமதிக்கப் பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டதால் உடலில் ஒரு பக்கம்  முழுவதும் இயங்காமல் போனது.
தொடர்ந்து கோலாலம்பூர் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்த பத்மினி மருத்துவச் செலவுக்குக் கூட பணமில்லாமல் யாருடைய உதவியுமின்றி இருந்துள்ளார். மலேசியா மதிப்பில் 15 ஆயிரம் ரிங்கிட் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3 லட்சம்) சிகிச்சைக் கட்டணமாக மருத்துவமனைக்கு கட்ட வேண்டி இருந்துள்ளது.அங்குள்ள பொதுமக்கள் இவரது நிலையை அறிந்து 15 ஆயிரம் ரிங்கிட்டை மருத்துவமனை கட்டணமாக செலுத்தியுள்ளனர். மேலும் 2 ஆயிரம் வெள்ளி மருத்துவக் கட்டணமாக கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து சில மாதங்களாக கோலாலம்பூர் அரசு மருத்துவ மனையிலேயே சிகிச்சைப் பெற்று வந்த பத்மினியை அங்குள்ள மருத்துவமனை மருத்துவர்கள் டிஸ்சார்ஜ் செய்துள்ளனர்.

பின்னர் பத்மினி மலேசியாவிலிருந்து பாபநாசத்தில் இருந்த கணவரின் உதவியுடன் சொந்த ஊரான பாபநாசம் தென் சருக்கைக்கு திரும்ப முயற்சித்துள்ளார்.அவர் தமிழ்நாட்டில் சிகிச்சை எடுக்க முடிவு செய்து, அங்குள்ள ஒரு தொண்டு நிறுவனம் மூலம்விமான டிக்கெட் பெற்று ஏர் இந்தியாவிமானம் மூலம் தமிழகம் திரும்பதயாராகியுள்ளார். ஆனால் ஏர் இந்தியா நிறுவனம் உடல்நலமற்ற பத்மினியை விமானத்தில் ஏற்ற மறுத்துள்ளது. உடல்நலமற்றவர்கள் விமானத்தில் பயணம்செய்ய வேண்டுமானால் ஏர்இந்தியா நிறுவனத்தின் மருத்துவரி டம் “விமானத்தில் பயணம் செய்யலாம்” என்ற சான்று கட்டாயம் பெற வேண்டும் என ஏர் இந்தியா விமான அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் பத்மினியின் நிலைமை அறிந்த கோலாலம்பூர் அரசு மருத்துவமனை மருத்து வர்கள் பத்மினியை ‘விமானத்தில் அழைத்துச் செல்லலாம்’ என்ற பரிந்துரை கடிதத்தை ஏர் இந்தியா அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர். தொடர்ந்து மலேசிய மருத்துவர்கள் இந்திய தூதரகத்திற்கு பத்மினி இந்தியா செல்ல உதவிட கேட்டுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்குமுன்னர் பத்மினி உடல் நலம் பாதிக்கப்பட்டு கோலாலம்பூர் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவர் மலேசியாவின் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  காப்பகத்தின் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். கணவர், மகன், மகள் என உறவினர்கள் பத்மினியை காண சொந்த ஊரான பாபநாசத்தில் தவித்து வருகின்றனர். அதே வேளையில் உணவுக்கு கூட வழியில்லாமல் காப்பகத்தின் உதவியில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் பத்மினி.  இந்த இக்கட்டான சூழ்நிலை யில் பத்மினியை தமிழகம் கொண்டு வர இந்திய அரசும், தமிழக அரசும், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரும் உதவிட வேண்டுமென பத்மினியின் கணவர் சந்திரசேக ரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அரசின் உதவியை எதிர்பார்த்து காத்துள்ளனர்.

;