tamilnadu

img

ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் முதல் சிறப்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஒன்றியக் குழு தலைவர் மு.கி.முத்து மாணிக்கம் தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையர் கை.கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட அரசிடம் கோரிக்கை வைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றியக்குழு துணைத்  தலைவர் கா. முத்துலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;