tamilnadu

ஊராட்சி கிராம சபை கூட்டம்

கும்பகோணம்: குடியரசு தின விழாவை முன்னிட்டு கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் நாச்சியார்கோவில் ஊராட்சியில் தலைவர் மகேஸ்வரி உமாசங்கர் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் சுபா திருநாவுகரசு, திருவிடைமருதூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் தமிழரசி குப்புசாமி துணைத் தலைவர் பழனி அம்மாள் ராஜன், தில்லை. பாண்டுரங்கன் ராஜ் முஹம்மது விஜயகுமார் செந்தில்குமார் சரவணன் நூர் முஹம்மது க. சுப்பிரமணியன் மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், நாச்சியார்கோவில் ஊராட்சியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது. ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்திட வேண்டும். நாச்சியார்கோவில் ஊராட்சியில் இயங்கி வரும் அண்ணா திருமண மண்டபத்தை சீர் செய்து நாச்சியார்கோவில் ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 21 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. நாச்சியார்கோவில் ஊராட்சி செயலர் வரதராஜன் நன்றி கூறினார்.

;