தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் நாட்டாணிக்கோட்டை வடக்கு மற்றும் திருவோணம் அருகே உள்ள ஊரணிபுரம் ஆகிய இடங்களில் துணை மின் நிலையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி மின் நிலையங்களை திறந்து வைத்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு மின் நிலையங்களை இயக்கி வைத்தார். முன்னாள் மாநில கயிறு வாரியத் தலைவர் எஸ். நீலகண்டன், அதிமுக நகரச் செயலாளர் வி.என்.பக்கிரிசாமி, பொறியாளர் கோவி.இளங்கோ, மக்கள் பிரதிநிதிகள் பால் ஏ.பக்கர், எம்.சுந்தர்ராஜன், தளிகைவிடுதி ஊராட்சி தலைவர் பொன்.முத்துவேல், ஒன்றியச் செயலாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் மதியழகன், ஆர்.க.முருகேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.