tamilnadu

40 நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

தஞ்சாவூர், மே 10- தஞ்சாவூர் மாவட்டத்தில் சனிக்கிழமை அன்று 40 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.  இதுகுறித்து, தஞ்சை மண்டல நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மேலாளர் கதிரேசன் கூறியதாவது, “தஞ்சை மாவட்டத்தில் நடப்பு கொள்முதல் பருவத்தில் 449 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, இதுவரை 4 லட்சத்து 64 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.  தற்போது கோடை சாகுபடி நெல் அறுவடை பணிகள் தொடங்கியுள்ள நிலையில், விவசாயி களின் நலன் கருதி 40 நெல் கொள்முதல் நிலையங் கள் திறக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல் மூட்டைகளை, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து பயனடையலாம் எனத் தெரிவித்தார்.