tamilnadu

img

வேளாண் சட்டம் குறித்து ஆன்லைனில் கருத்துக் கேட்பு.... இந்தியில் கடிதம் வந்ததால் சர்ச்சை

தஞ்சாவூர்:
வேளாண் சட்டம் குறித்து டெல்டா விவசாயிகள் சங்க பிரதிநிதிகளிடம், ஆன்லைனில் கருத்துக் கேட்பு கூட்டத்திற்காக அனுப்பிய கடிதம் இந்தியில் வந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.

உச்சநீதிமன்றம் அமைத்த குழு முன்னிலையில், வியாழன் அன்று பல்வேறு மாநில விவசாயிகள் சங்க பிரதிநிதிகளிடம் ஆன்லைனில் கருத்துக் கேட்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் கூட்டம் தொடர்பாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும் கலந்துகொள்ளும் நிலையில், அவர் களுக்கு அனுப்பிய கடிதம் இந்தியில்இருந்ததால் விவசாயிகள் சங்க  பிரதிநிதிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.இது குறித்து விவசாய சங்க பிரதிநிதியான வெ.ஜீவக்குமார் கூறியதாவது;

“உச்சநீதிமன்றம் சார்பில் அமைக்கப்பட்ட குழுவினர், வேளாண் சட்டத்தின்நன்மை, தீமை குறித்து விவசாயி களிடம் கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. இதற்காக பெயர் பட்டியல் தயார் செய்து அனுப்பிய நிலையில், இது தொடர்பாக அவர்கள்மெயில் அனுப்பியுள்ளனர். அது இந்தியில் வந்துள்ளதால், அதை முழுமையாக படித்து தெரிந்து கொள்ள, இந்தி தெரிந்த நபரிடம் படித்து தெரிந்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத் தக்கது” என்றார்.

;