tamilnadu

img

சுடுகாட்டுப் பாதை ஆக்கிரமிப்பு மீட்டு சீரமைத்து தரக் கோரிக்கை

தஞ்சாவூர், ஜன.3- சுடுகாட்டுப் பாதையை ஆக்கிர மிப்பில் இருந்து மீட்டு அதனை சீர மைத்து தர வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  தஞ்சை மாவட்டம், திருவோணம் ஒன்றியம், வடக்குக் கோட்டை ஆதி திராவிடர் தெருவில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை அமைப்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஆம்பல் துரை ஏசுராஜா புதிய கிளை யைத் துவக்கி வைத்து சிறப்புரை யாற்றினார்.  புதிய கிளைத் தலைவராக, பி.ராஜ்குமார், செயலாளராக எஸ்.நல்ல தம்பி, பொருளாளராக  எம்.மகேஷ், துணைத் தலைவர்களாக எஸ்.சிவா, எம்.வீரபிரதாப், துணைச் செயலாளர்க ளாக கே.ராகவன், ஆர்.ஸ்டாலின் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், 50 பேர் புதிதாக தங்களை வாலிபர் சங்கத்தில் இணைத்துக் கொண்டனர். அனைவருக்கும் உறுப்பி னர் அட்டை வழங்கப்பட்டது.  கூட்டத்தில், “வடக்குக் கோட்டை ஆதிதிராவிடர் தெருவில் உள்ள சுடு காட்டுப் பாதை ஆக்கிரமிப்பு செய்யப் பட்டு ஒற்றையடிப் பாதையாக உள்ளது. இதனால் சடலத்தைக் கொண்டு செல்ல முடியாமல் பொது மக்கள் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே, ஆக்கிரமிப்பை அகற்றி சுடு காட்டுப் பாதையை அகலப்படுத்தி தரவேண்டும்.  ராஜாமடம் கிளை வாய்க்காலில் புதிய பாலம் அமைக்கப்பட்ட பிறகு ஏற்க னவே இருந்த குளிக்கும் படிக்கட்டு அமைக்கப்படாமல் உள்ளது. எனவே  படித்துறை அமைத்து தர வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. 

;