tamilnadu

img

காலமானார்

தஞ்சாவூர், அக்.28- இந்தியன் வங்கி ஓய்வு பெற்ற ஊழியரும், வங்கி ஊழியர் சங்கத்தின்(பெபி) முன்னணி ஊழியருமான தோழர் மணி என்று எல்லோ ராலும் அன்புடன் அழைக் கப்பட்ட டி.சுப்பிரமணி யன்(70) அக்.26 இரவு 10 மணியளவில் தஞ்சையில் காலமானார். இவருக்கு மாலி என்ற மனைவியும், அச்சகம் நடத்தி வரும் எஸ்.சண்முகம் என்ற மகனும் உள்ளனர்.  மதுக்கூரை பூர்வீகமாகக் கொண்ட தோழர் டி.சுப்பிர மணியன், கடந்த 1991 முதல் தஞ்சையில் இருந்து கட்சிப் பணி, வங்கி ஊழியர் சங்கம் ஒப்படைத்த பணிகளை நிறைவேற்றுவதில் அக்க றையுடன் செயல்பட்டவர். பாரதி புத்தகாலயம் தொ டங்கப்பட்ட காலம் முதல் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு பணியாற்றி வந்தார்.  தோழரின் இறுதி நிகழ்ச்சி கள் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், வங்கி மற்றும் பல்வேறு அரங்க நிர்வாகி கள், அரசியல் மற்றும் வர்த்தக பிரமுகர்கள், உற வினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.