tamilnadu

img

குமரப்பா பள்ளியில் என்எஸ்எஸ் முகாம் நிறைவு

தஞ்சாவூர் அக்.3- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பழுக்காடு கிராமத்தில் டாக்டர் ஜே.சி.குமரப்பா செண்டினரி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு விழா நடந்தது. இதில் தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்க மாநில துணை பொதுச் செயலாளரும், பள்ளி தாளாளருமான ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் மற்றும் திட்ட அலுவலர் சுரேஷ் வரவேற்றார். முகாமில் நிறைவு விழாவையொட்டி மரக்கன்றுகள் நடப்பட்டன. முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இம்முகாமில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முதுகலை ஆசிரியர் பிரகாஷ் நன்றி கூறினார்.