tamilnadu

img

தஞ்சாவூரில் வடமாநில பெண் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான சம்பவம் பாலியல் தொழிலில் கோடிகளை குவித்த கும்பல் சிக்கியது

தஞ்சாவூர், ஜூன் 7-  தஞ்சையில் வட மாநிலப் பெண் பாலியல் வன்புணர்வு விவகாரத்தில் சிக்கிய 5 பேர் கொண்ட கும்பல் சிறை யில் அடைக்கப்பட்ட நிலையில், 10 ஆண்டுகளாக, 8 வீடுகளை வாடகைக்கு எடுத்து கோடிக்கணக்கான ரூபாய் பேரத்தில் பாலியல் தொழில் செய்து வந்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் அடுத்த செங்கிப்பட்டி யில், ஜுன் 1 ஆம் தேதி, ரத்தக் காயத்து டன் 20 வயது மதிக்கத்தக்க வடமாநில இளம்பெண் ஒருவரை, சிலர் காரில் இருந்து கீழே தள்ளி விட்டு சென்ற னர். அவரை மீட்ட அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தினர், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக் காக சேர்த்தனர். வீட்டு வேலைக்கு என அழைத்து வந்து, அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்து, பாலி யல் தொழிலிலும் ஈடுபட வைத்ததாக விசாரணையில் தெரிய வந்தது.

தஞ்சை சரக டி.ஐ.ஜி லோகநாதன், எஸ்.பி மகேஷ்வரன் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் கண்ணன் தலைமை யில் 7 பேர் கொண்ட காவல்துறை யினர், தலைமறைவாக இருந்த, மேல வஸ்தாசாவடியை சேர்ந்த செந்தில் குமார் (49), அவரது மனைவி ராஜம் (47), லஞ்ச வழக்கில் இடைநீக்கம் செய்யப்பட்ட காவல் உதவி ஆய் வாளர் பிரபாகரன் (64), ராமச்சந்திரன் (40), புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பழனிச்சாமி (51) உள்ளிட்ட 5 பேரையும் கடந்த 4 ஆம் தேதி இரவு கைது செய்து விசாரணை நடத்தி, சனிக்கிழமை சிறையில் அடைத்தனர். அத்துடன் அவர்களிடமிருந்து 4 கார்கள், 3 டூவீலர்கள், 4 செல்போன், ஒரு டைரி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.  விசாரணையில், தஞ்சையில், உரிமையாளர்கள் அருகில் இல்லாத வீடாக பார்த்து 8 வீடுகளை ஒத்தி மற்றும் வாடகைக்கு எடுத்து, செந்தில் குமார், ராஜம் ஆகியோர் கடந்த 10 ஆண்டாக, பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளனர். இதற்கு மூளையாக, இடைநீக்கம் செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் செயல் பட்டதுடன், காவல்துறை பிரச்சனை எது வும் வராமல் பார்த்து கொண்டுள்ளார்.

மேலும் யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக பைனான்ஸ் மற்றும் டிராவல்ஸ் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். ராஜத்திடம் சுமார் ஆயிரம் வாடிக்கையாளர்களின் செல் நம்பர்கள் உள்ளன. இதில், அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் தொடர் வாடிக்கையாளர்களாக இருந்தது தெரியவந்துள்ளது. வட மாநில பெண்களை பாலியல் தொழி லுக்கு பயன்படுத்தியுள்ளனர். பிரச்சனை எதுவும் வாரது என்பதற்காக இந்த முறையை கையாண்டுள்ளனர். இதற்காக வடமாநிலத்தில் பல புரோக்கர்களை வைத்து இருந்தனர். இவர்களிடம் தொடர்பிலிருந்த பலர் காவல்துறையினர் எனவும், தற்போது ஓய்வு பெற்று சென்று விட்டாலும் அவர் களும் தேவையான உதவிகளை செய்து கொடுத்து வந்துள்ளனர் எனவும் தெரிய வந்துள்ளது. இதனால் தான் பெரிய அளவில் இதுவரை சிக்காமல் பாலி யல் தொழிலில் தனி சாம்ராஜ்யமே நடத்தி வந்துள்ளனர். இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்து ள்ளனர். மேலவஸ்தாசாவடியில் உள்ள வீடு மட்டும் மூன்றரை கோடி மதிப்பு கொண்டது என தெரியவந்தது. விபரம் தெரிய வந்த நிலையில், வீடு, கார்களை வாடகை கொடுத்தவர்கள் மிகவும் கலக்கத்தில் உள்ளனர்.

;