tamilnadu

img

தஞ்சை அருகே 50 பேர் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர்

தஞ்சாவூர், ஆக.2- தஞ்சாவூர் அருகே 50-க்கும் மேற்பட்டோர் சட்டக்கல்லூரி மாணவர்  தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.  தஞ்சாவூர் அருகே உள்ள கொ ல்லாங்கரை கிராமத்தில் சட்டக்க ல்லூரி மாணவர் மகேந்திரன் தலைமை யில் 50-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் சனிக்கிழமை கட்சியில் இணைந்தனர். சிபிஎம் மாவட்டச் செய லாளர் கோ.நீலமேகம், அவர்களை வர வேற்று, கட்சி அமைப்பு, செயல் திட்டங்கள் குறித்து பேசி, கட்சிக் கொ டியை ஏற்றி வைத்தார். அகில இந்திய  விவசாய தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் கே.அபிமன்னன் விவசா யத் தொழிலாளர் சங்க கொடியினை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் கட்சி ஒன்றியச் செயலாளர் எம்.மாலதி, வழக்கறிஞர் பன்னீர்செல்வம், விஜய குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.