tamilnadu

தஞ்சை ரயில் நிலையத்துக்கு ராஜராஜன் பெயரிடுக ஊராட்சி ஒன்றியக்குழு கோரிக்கை

கும்பகோணம், பிப்.1- தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய குழுவின் முதல் கூட்டம் ஒன்றிய குழு தலைவர் சுமதி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் பழனிசாமி, ஆணையர் அறிவானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தராஜ், மாவட்ட குழு உறுப்பினர் தாமரை செல்வன் பாத்திமா ஆகியோர் முன் னிலை வகித்தனர். மயிலாடுதுறை நாடாளு மன்ற தொகுதி உறுப்பினர் செ.ராமலிங்கம் பேசுகையில், இப்பகுதியின் அத்தியாவசிய பணிகளுக்கு எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படும் என்றார்.  கூட்டத்தில், தஞ்சாவூர் ரயில் நிலையத்தி ற்கு ராஜராஜ சோழன் பெயர் சூட்ட வேண்டும். ஐந்து ஆண்டு கால பணி பொறுப்பில் பாபநா சம் ஊராட்சி ஒன்றியத்தில் முன் மாதிரி ஒன்றிய மாவட்ட மாநில அளவில் முதன்மை ஒன்றிய மாக தரம் உயர்த்தும் வகையில் அனைத்து  உள்ளாட்சி பிரதிநிதிகளும் பணியாற்றுவது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. முன்னதாக இளநிலை உதவியாளர் பத்மநாதன் தீர்மானங்களை வாசித்தார்.

;