தஞ்சாவூர், ஜூன் 13- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு டென்ட் டீலர்ஸ் ஒலி, ஒளி அமைப்பு டெக்க ரேட்டர் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருமணம் சார்ந்த தொழில் களை செய்து வரும் டெக்க ரேட்டர், ஒலி, ஒளி அமைப்பு, பந்தல் அமைப்பு, சமையல் கலைஞர்கள், போன்ற தொ ழில்கள் பாதிக்கப் பட்டுள்ளன. இந்த தொழிலை நம்பியுள்ள உரிமையா ளர்கள் மற்றும் தொழிலா ளர்கள் ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தொழில் நடத்த அரசிடம் தளர்வு கேட்டு நாதஸ்வரம், மேளம் முழங்க கருப்பு பலூன் மற்றும் குடை களை கையில் ஏந்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வட்டாட்சியர் ஜெயலட்சுமி யிடம் மனு கொடுத்தனர். இந்நிகழ்வில் மண்டல பொறுப்பாளர் சாமிநா தன், பேராவூரணி சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பா ளர் முகிலன் நீலகண்டன், தினேஷ், செந்தில்குமார் முருகானந்தம், நீலகண்டன் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.