tamilnadu

img

சுமைப் பணித்  தொழிலாளர்களுக்கு நிவாரணம்

 தஞ்சாவூர், மே 10- தஞ்சையில் சிஐடியு சுமைப்பணித் தொழிலாளர் சங்கம் சார்பில், 60 க்கும் மேற்பட்ட சுமைப்பணித் தொழிலாளர்க ளுக்கு, ரூ 20 ஆயிரம் மதிப்புள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.  நிகழ்ச்சிக்கு, சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் த.முருகேசன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், நிவாரணப் பொருட்களை வழங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலா ளர் என்.குருசாமி, சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கே.அன்பு, எஸ்.செங்குட்டுவன், கே.பாலமுருகன், போக்குவரத்து ஊழியர் சங்கம் முருகன், நிர்வாகி திருநாவுக்கரசு, மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தலைவர் முருகேசன், சுமைப்பணித் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஜெகன், நமச்சிவாயம் கலந்து கொண்டனர்.